Wednesday, 28 January 2015

வெற்றி என்பது


வெற்றி என்பது. சரியான நேரத்தில், சரியான வார்த்தையை, சரியான இடத்தில் பேசுவதே ஆகும். 

ஒரு சிறிய உவமை. ராவணனின் தம்பி கும்பகர்ணன் பிரும்மாவை காண தவம் பண்ணான். அவர் வந்தார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். எனக்கு அழியாத வாழ்க்கை வேண்டும். நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்பதற்க்கு பதிலாக நித்திரைத்துவம் வேண்டும். அதாவது அழியாத தூக்கம் வேண்டும்னு கேட்டான். அவரும் அப்டியே ஆகட்டும்னு வரம் கொடுத்துட்டு பெய்ட்டார். அதன் பின்னர். அவன் ஆறு மாதம் சேர்ந்தாப்ல தூங்குவான். பின்னர் மீதி ஆறு மாதம் தின்னுன்டே இருப்பான். டங்க் கொஞ்சும் ஸ்லிப் ஆனதுல எல்லாம் டோட்டல்லா மாறி போச்சு பார்த்தீங்களா. 

 இது புராணம். சரித்திரத்திலும் இதேபோல் சிறு அளவு கவனம் சிதறி பேசிய வார்த்தைகளுக்கு பெரிய அளவில் விளைவுகள் வந்து இருக்கிறது. அதனால் தான் பெரியவர்கள் சொன்னார்கள். ஒரு வார்த்தையை நமது நாவு பேசுவதற்க்கு முன் நமது மனம் அதே வார்த்தையை பத்து முறையாவது பேசி பார்க்க வேண்டும். 

 சிறிய தவறுகளுக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுத்து விடாதீர்கள். சிறிய ஓட்டை, பெரிய கப்பலையே மூழ்கடித்து விடும். 

 பெஞ்சமின் பிராங்களின். 

No comments:

Post a Comment