1] பொற்கோயில் வீதியிலே வைர மணி தேரினிலே
பவனி வரும் மாணிக்க பைங்கிளியே.
2] பொதிகை மலை சாரல் போலே
தேன் சிந்தும் தூறல் போலே
வண்ண முத்து சிதறல் போலே
அன்ன முத்து அழகு போலே
வந்த வானத்து தேவதையே.
மாயவன் குழல் போலே
3] மாயவன் குழல் போலே
கற்கண்டு கடல் போலே
பாடும் காண பொற் குயிலே.
கோடி மயில் தோகை போலே
4] கோடி மயில் தோகை போலே
கோடி நிலவு அழகு போலே
கோடி பல்லவன் சிற்பம் போலே
வந்த தோடி ராகமே.
பின் குறிப்பு. நான் இதுவரை எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை. ஒரு கவிங்கன் என்கிற முறையில் இந்த கவிதையை எழுதினேன். வெறும் உடலை மட்டும் நேசிக்காமல் உள்ளத்தையும் நேசிக்கும் உண்மை காதலர்களுக்கு காதல் பரிசாக இந்த கவிதையை தருகிறேன்.
by HV Krishna Prasad.

No comments:
Post a Comment